இன்று ஒரே நாளில் 110 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் அதிர்ச்சி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 110 பேர்களும் டெல்லி மாநாட்டில் இருந்து தமிழகத்துக்கு திரும்பியவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
நேற்று இரவு முதல் தாங்களாகவே பரிசோதனை செய்ய பலர் முன் வந்ததாகவும் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 110 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சித் தகவல். தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான பேர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.