போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று மாலை திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் தமிழகத்தில் என்னதான் நடக்கின்றது என்று எண்ண தோன்றுகிறது
இந்த நிலையில் திருச்சி அதவத்தூரில் 9ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 11 தனிப்படைகள் விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
மேலும் இதுவரை தனிப்படையினர் 10க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.