11 ஓவர்களில் 90, 5 ஓவரில் 46 என இந்தியாவுக்கு இலக்கு: அடுத்த என்ன ஆச்சு தெரியுமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இன்று 2வது டி-20 போட்டி ஆரம்பமானது.
டாஸ் வென்ற இந்தியா கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்ததால் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு 11 ஓவர்களில் 90 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை தொடர்ந்ததால் இந்திய அணிக்கு 5 ஓவரில் 46 ரன்கள் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
ஆனாலும் பிட்ச் மழை காரணமாக மோசமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.