11 ஆண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண் கைது
தாய்லாந்து நாட்டில் பெண்ணை மணக்கும் ஆண் வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை கடைபிடித்து 11 ஆண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் மூலம் திருமண ஆசை காட்டி அடுத்தடுத்து 11 இளைஞர்களை தாய்லாந்தில் உள்ள நங் ஹாய் மாகாணத்தை சேர்ந்த பெண் ஜரியாபார்ன் புயாயய் என்பவர் திருமணம் செய்துள்ளார். கடந்த மாதம் மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய மோசடி வெளியே தெரிய வந்ததால் அவரது கணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.