அனைவரும் பாஸ் என முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்தத் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

மேலும் பதினோராம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்ச்சி பெறாத பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மாணவர்களுக்கான தேர்வு மட்டும் சூழ்நிலையை பொருத்து நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என முதல்வர் அறிவித்து உள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply