சசிகலாவுக்கு ஆதரவாக சூழ்நிலை மாறினால் மீண்டும் போராட்டம். இளைஞர்கள் அதிரடியால் போலீஸ் குவிப்பு
தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா வருவதற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் சென்னை திரும்ப உள்ளதாகவும், அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் கவர்னர் ஒருவேளை சசிகலாவுக்கு ஆதரவான முடிவை எடுத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டால் மீண்டும் மெரீனால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.