இத்தாலியில் பத்தாயிரம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா
சீனாவிலுள்ள வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இத்தாலியில் இந்த வைரஸ் பரவல் மிக அதிகமானது
இன்றுவரை இத்தாலியில் 10,000 பேர் பலியாகி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 924 பேர் கொரோனா வைரஸுக்கு மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இத்தாலியில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதை தடுக்க அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சி செய்தும் 10000க்கும் அதிகமான உயிர்களை இழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.