1000 கிலோ ரசாயன மாம்பழம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1000 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மாம்பழம் வாங்கவே பயப்படுகின்றனர்.
முக்கனிகளில் ஒன்றாகிய மாம்பழ சீசன் கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலையில் மாம்பழத்தை பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இருப்பினும் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தால் உடல்நலக்கேடு உண்டாகும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1000 கிலோ மாம்பழத்தை பறிமுதல் செய்த மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை அழித்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.