கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அருகே 100 போராட்டக்காரர்கள் கைது
1176 மதிப்பெண்கள் வாங்கியும் மருத்துவ படிக்க முடியாத அனிதா எடுத்த சோகமுடிவால் தமிழகமே கண்ணீர்க்கடலில் ஆழ்ந்துள்ளது. அனிதாவின் மரணம் மாணவர்களையும் அரசியல் கட்சிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை
முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு வந்த போலீசார் போராட்டம் செய்த 100 பேர்களை கைது செய்து போக்குவரத்து ஒழுங்கு செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.