shadow

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்: ஸ்டாலின் வலியுறுத்தல்

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாயை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் விதித்த 100கோடி ரூபாய் மற்றும் அதன் மீதான வட்டிப்பணத்தில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேர் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உரிய நிதியுதவியையும் உடனடியாக அளிக்க வேண்டும்

போர்முனையில் எதிரிகளை விரட்டுவது போல வீடு வீடாக விரட்டி கொன்று, இறந்தோர் உடல்களை விலங்குகளை போல தரதரவென ரோட்டில் இழுத்து வரும் வீடியோ காட்சிகளும், குறிப்பாக ஒரு இளம்பெண்ணின் வாயில் திட்டமிட்டு குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ள கொடுமையும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்வாறு ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply