100-வது சுதந்திர தினத்தின்போது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது – வைகோ

காஷ்மீர் விவகாரம் உள்பட பல விஷயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சக அரசியல்வாதிகளிடமும், நெட்டிசன்களிடமும் வாங்கி கட்டி கொள்ளும் தலைவர்களில் ஒருவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘100-வது சுதந்திர தினத்தின்போது காஷ்மீர் இந்தியாவில் இருக்காது என்று கூறியுள்ளார். வைகோவின் இந்த கருத்து நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காஷ்மீர் குறித்த விவாதத்தில் காங்கிரசை 30 சதவீதமும் பாஜகவை 70 சதவீதமும் விமர்சித்தேன் என்றும் வைகோ தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியையே வைகோ விமர்சனம் செய்து வருவது அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது

Leave a Reply