shadow

அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த வெற்றிக்கு விஞ்ஞானிகள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரு செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 583 கி.மீ புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 17 நிமிடம் 45 வினாடிகளில் இரு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டது.

2 செயற்கைக்கோள்களும் நிலப்பரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு கடல் வாழ் வழி போக்குவரத்தை கண்காணிக்கும். ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் செயற்கைகோள் வெற்றி காணிக்கையாக்கப்படுகிறது. செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு மிகவும் எளிமையான ராக்கெட் பிஎஸ்எல்.வி.

வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைக்கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்படும்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்

Leave a Reply