வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கிடையாது: அதிரடி உத்தரவு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 10 நாட்கள் கழித்து நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்த 10 நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் வேலை நிறுத்தம் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பத்து நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.