10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலை பிரச்சனை குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள பாஜக பிரமுகர் ரமா என்பவர் கடந்த பத்து நாட்களாக கேரள சட்டமன்ற கட்டிடத்தின் முன் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்
இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவரது உடல் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.