10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு
10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிட்டிருந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகளில் இனி மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை இணைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பொதுத்தேர்வு அட்டவணை இதோ:
மார்ச் 27 – மொழிப்பாடம்
மார்ச் 28 – விருப்பப்பாடம்
மார்ச் 31 – ஆங்கிலம்
ஏப்.3 – சமூக அறிவியல்
ஏப். 7 – அறிவியல்
ஏப். 13 – கணிதம்
இந்த தேர்வின் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
10 ஆம் வகுப்பு, பொதுத்தேர்வு, புதிய தேதி, முடிவுகள் ,
Leave a Reply
You must be logged in to post a comment.