shadow

10 நர்ஸ்கள் வேலையை செய்யும் ஒரு ரோபோ! வேலை பறிபோகும் அபாயம்

 

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் நர்ஸ் பணி புனிதமான பணியாக கருதப்பட்டு வருகிறது. சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் இந்த வேலைக்கும் தற்போது டெக்னாலஜி ஆப்பு வைத்துவிட்டது.

ஆம், ஹாங்காங்கில் உள்ள Guangzhou குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் நவீன டெக்னாலஜியுடன் கூடிய ரோபோ நர்ஸ் பயன்படுத்தப்படுகிறது,. இந்த ரோபோ 10 நர்ஸ்கள் செய்யும் வேலையை செய்யுமாம். ஜிபிஎஸ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோவை மற்ற மருத்துவமனைகளும் பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்த ரோபோ உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பரவினால் நர்ஸ்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. நர்ஸ்களை போல நோயாளிகளை பணிவன்புடன் கவனிக்க ரோபோவுக்கு தெரியாது என்றும் அதனால் நர்ஸ்களை வேலையிழக்க செய்யும் இந்த ரோபோவை தடை செய்ய வேண்டும் என்றும் நர்ஸ்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply