10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும்..: அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்
அதிமுகவை 10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசசமாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர், தினகரன் என்றும் அவருடைய ஆசை என்றுமே நனவாகாது என்றும் கூறினார்.
தினகரன் போல் 10 ஆயிரம் பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும், தினகரன் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும், அதிமுக வலிமையான இயக்கம் என்பதால் எங்கள் இயக்கத்தை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் அதிமுக தலைவர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களின் கருத்துமோதல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.