அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களை தேர்வு அறைக்கு அழைத்து வர வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன்
அதேபோல் தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், சுகாதார துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Lakshmi Narayanan PM
Your efforts towards education will be remembered sir.