10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசப்படம் எடுத்து நண்பனுக்கு அனுப்பிய இளைஞர் கைது!
கூறைநாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, பழகி வந்துள்ளார். இதனிடையே, மாணவியை பலாத்காரம் செய்ததுடன் அதை, செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தோஷ், அந்த வீடியோவை, அவரது நண்பரான அக்களுரை சேர்ந்த கண்ணனுக்கு அனுப்பியதாகவும் அந்த வீடியோவை பார்த்து சபலப்பட்ட கண்ணன், வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததாகவும், அந்த சமயத்தில் மாணவியின் பெற்றோர் வந்ததால் அங்கிருந்து உடனே தப்பிச்சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த, போலீசார், இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.