10ஆம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் சிறப்பு துணை தேர்வுகள் எழுத விண்ணப்பிக்கும் தேதியும் தேர்வு தேதியும் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையத்தில் ஆன்லைன் வழியாக மே 6 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என்றும், தேர்வுக்கட்டணமாக ரூ.175-ஐ செலுத்த வேண்டும் என்றும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாணவர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply