shadow

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.25 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த ரயிலின் எஸ் – 4 மற்றும் எஸ்-5 பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply