shadow

1.5 லட்சம் பேர்களை திமுகவில் இருந்து நீக்க முடியுமா? அழகிரி சவால்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அமைதிப்பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி ஏற்கனவே கூறியிருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த பேரணி முடிவடைந்தது. ஊடகங்களின் கணிப்பின்படி இந்த பேரணியில் ஒருசில ஆயிரம் பேர்கள் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பேரணியின் முடிவில் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், அவர்களை எல்லாம் திமுகவில் இருந்து நீக்குவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply