பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு ஆணை
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்து அதன் பின்னர் பரோலில் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு மாதம் நீட்டித்து, தமிழக அரசு அரசாணை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை காண, பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளனின் விண்ணப்பத்தை ஏற்று கடந்த மாதம் 24ம் தேதி, ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
இன்றுடன் ஒரு மாத பரோல் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.