கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேரில் பிரச்சாரம் செய்வதை தவிர்க்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டிருந்தாலும் கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஹோலோகிராம் 3டி மூலம் பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஜினிகாந்த் வீட்டில் இருந்தபடியே மக்களிடம் அனைத்து மாவட்ட மக்களிடம் நேரில் பேச முடியும்

3டி தொழில்நுட்பம் என்பதால் ரஜினிகாந்த்தை நேரில் பார்ப்பது போன்ற மக்களுக்கு ஒரு உணர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் ஒரே ஒரு ட்வீட் போட்டால் பத்தே நிமிடத்தில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகும் நிலையில் போல முறையில் அவர் தொழில்நுட்பம் மூலம் பிரச்சாரம் செய்தாலும் கண்டிப்பாக மக்களிடம் எடுபடும் என்று எதிர்பார்த்து படுகிறது

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இதேபோன்று 12000 எல்சிடி திரைகள் மூலம் பிரச்சாரம் நடைபெற்று உள்ளது என்பதை உதாரணமாக கொண்டே தமிழகத்தில் ரஜினி இந்த தொழில்நுட்பத்தை கையாள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply