ஸ்ரீசாந்த் மீதான தடை ரத்து! உச்ச நீதிமன்றம் உத்தரவு

கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி, தடையை ரத்து செய்தார்.

ஆனால் இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply