ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவை தமிழக அரசுதான் எடுக்க முடியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும். என்றும் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
மேலும் அகர்வால் குழு அறிக்கையில் என்ன கூறினாலும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடமே உள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.