ஸ்டெர்லைட் மேல்முறையீடு: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் காரணமாக அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சமீபத்தில் மேல்முறையீடு செய்ததூ.
இந்த மேல்முறையீட்டு மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் தரப்பபடவில்லை. திடீரென்று ஆலை மூடியதால் அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த விசாரணையை நடத்தியது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.