shadow

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு: அதிர்ச்சியில் தூத்துகுடி மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் தூத்துகுடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் ஆலையை திறக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 3 வாரங்களுக்குள் உத்தரவிட வேண்டும் என்றும், ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தனிச்சட்டம் தேவையில்லை, மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Reply