ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 1.68 லட்சம் கோரிக்கை மனு
ஒருபக்கம் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என பொதுமக்கள் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி நடந்த போராட்டத்தில் 1.68 லட்சம் பேரின் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.