shadow

ஸ்டாலின் பந்துவீச்சை ஈபிஎஸ் சமாளிப்பாரா? சட்டசபையில் ருசிகர விவாதம்

தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய விவாதத்தின்போது முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி பேசியபோது, ஸ்டாலினின் பந்துவீச்சில் ஈபிஎஸ் அரசு க்ளீன்போல்ட் ஆகிவிடும் என்று கூறினார்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘ஸ்டாலின் பந்துவீச்சில் அதிமுக அரசு க்ளீன்போல்ட் ஆகாது என்றும், ஏனெனில் அவர் நோபால் தான் வீசுவார் என்றும் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கமணி பேசியபோது, ‘மைதானத்திற்குள் வராமலே ஸ்டாலின் பந்து வீசிக் கொண்டிருப்பதாகவும், ஸ்டாலின் மைதானத்துக்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.

கிரிக்கெட் விளையாட்டை வைத்து நேற்று சட்டமன்றத்தில் விவாதம் நடந்ததால் சபை உறுப்பினர்கள் கலகலப்பாக இருந்தனர்.

Leave a Reply