shadow

ஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமரை பற்றி மு.க.ஸ்டாலின் பேசும்போது நாவடக்கி பேசுவது நல்லது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘ஒரு பிரதமர் வெளிநாட்டுக்கு செல்கிறார் என்றால் மற்றவர்களை போல் அவர் சுற்றுலாப்பயணியாக செல்லவில்லை. அவர் பல வேலைகளுடன் செல்கிறார். பிரதமர் வெளிநாட்டு பயணம் செல்கிறார் என்றால் இந்திய நாட்டிற்கும், நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் லாபம்

எனவே பிரதமர் வெளிநாட்டு பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது நாவடக்கி பேசுவது நல்லது என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply