shadow

ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் அதுகுறித்த ஆலோசனை எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Reply