ஸ்டாலின் அறிவித்தால் ராகுல் பிரதமராகிவிட முடியுமா? தமிழிசை கேள்வி

இந்தியாவிலேயே முதல்முறையாக ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த முதல் மற்றும் ஒரே அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான். காங்கிரஸ் கட்சியினர்களே ராகுல் காந்திதான் பிரதமர் என்று இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராகி விட முடியாது என்றும் மற்ற கட்சிகளும் ராகுலை ஏற்றுக் கொண்டால்தான் பிரதமராக முடியும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். மேலும் ஸ்டாலின் அறிவித்தால் மட்டுமெ ராகுல் பிரதமராகிவிட முடியுமா? என்றும் அவர் கேள்வி
எழுப்பியுள்ளார்.

மேலும் பாஜகவில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் இன்னும் சில நிமிடங்களில் வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

Leave a Reply