ஸ்டாலினின் காது செவிப்பறை கிழிந்துவிடும்: முதல்வர் பழனிசாமி

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மு.க.ஸ்டாலின் முதல்வரை கொஞ்சம் ஓவராகவே விமர்சனம் செய்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் இதுகுறித்து இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காது செவிப்பறை கிழிந்துவிடும் என்றும், முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் ஸ்டாலின் என்னை தரக்குறைவாக பேசுகிறார் என்றும் கூறினார்.

மேலும் என்னை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம்; ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக் கூடாது என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.

Leave a Reply