shadow

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டா? சின்மயியை எச்சரித்த சுவிஸ் நாட்டு தமிழர்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை சின்மயி உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்க் என சுவிஸ் நாட்டை சேர்ந்த தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர்தான் வைரமுத்து, சின்மயி கலந்து கொண்ட நிகழ்ச்சியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து-சின்மயி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர் சுரேஷ் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சின்மயி மற்றும் அவருடைய தாயார் என் வீட்டில் தங்கியிருந்தனர். வைரமுத்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் வைரமுத்து இந்தியாவுக்கு சென்றுவிட்டார். சின்மயி ஒருவாரம் கழித்துதான் இந்தியா சென்றார்

வைரமுத்து மீது பொய்யாக குற்றம்சாட்டுவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழுமுறை தேசிய விருதையும் பத்மஸ்ரீ விருதையும் பெற்ற ஒரு தமிழ் அறிஞர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க கூடாது என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply