shadow

வைகோவை கிண்டலடித்த எஸ்.வி.சேகர்

திமுகவுடன் குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த வைகோ, தற்போது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று கூறி வருகிறார். உலகிலேயே ஒரு கட்சி இன்னொரு கட்சியை முதல்வராக்குவேன் என்ற புரட்சி லட்சியத்துடன் இருப்பவர் வைகோ மட்டுமே என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்துவிட்டது குறித்து கருத்து கூறிய வைகோ, ‘அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.

வைகோவின் இந்த கருத்து குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிரச்சினைகளைக்கூட தாண்டிடலாம். கூடவே இருக்கிற உங்களைத்தாண்டவே முடியாத பவர் பல்ப் நீங்க’ என்று கலாய்த்துள்ளார்,.

ஆனால் இதே வைகோவின் மதிமுக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த போது எஸ்.வி.சேகர் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply