வைகோவுக்கு எதிராக பாஜகவினர் முழக்கம்
நேற்று பிரதமர் மோடி திருப்பூர் வந்தபோது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமருக்கு எதிராக கருப்புக்காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையிலும் வைகோ தனது எதிர்ப்பை பதிவு செய்ய தவறவில்லை
இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்பிய வைகோவிற்கு எதிராக பாஜகவினர் கோஷம் போட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவிற்கு எதிராக பாஜகவினர் போலீசார்களின் எச்சரிக்கையை மீறி முழக்கமிட்டதால்,பாஜகவினர் மற்றும் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் நேற்று பாஜக பெண் தொண்டர் ஒருவர் கோவையில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவினர் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.