வேளாண் மண்டல சட்டம்: என்னென்ன தொழில்கள் டெல்டாவில் செய்ய முடியாது?

வேளாண் மண்டல சட்டம் சமீபத்தில் இயற்றப்பட்டதால் இனிமேல் டெல்டா பகுதியில் என்னென்ன தொழில்கள் செய்ய முடியாது என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதன்படி துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு மற்றும் அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களைப் பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, பிற ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட தொழில்கள் இனி டெல்டா பகுதியில் செய்ய முடியாது என்பதும், இதுகுறித்த தொழிற்சாலைகள் இந்த பகுதியில் தொடங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply