வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் சற்றுமுன் வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி பெற்றுக்கொண்டார்

Leave a Reply