வேலூர் தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!
வேலூரில் பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதை காரணம் காட்டி அந்த தொகுதியில் தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்தி உத்தரவிட்டது
இந்த நிலையில் திமுக பிரபலங்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் வேலூரில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்
ஏற்கனவே இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.