வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது புகார்..
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வருமான வரி சோதனை தொடர்பாக தேர்தல் செலவின உதவி அலுவலர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் சமீபத்தில் அவருடைய வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டு பணம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து இன்று தேர்தல் செலவின உதவி அலுவலர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படும் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.