ஒருநாள் கொரோனா பாதிப்பால் அதிர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து வேலூரில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952 ஆக உயர்வு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் வேலூரில் குணமடைந்தோர்- 3,793, உயிரிழப்பு – 40, சிகிச்சை பெறுவோர் -1,119 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேலூரில் நேற்று ஒரே நாளில் குணமடைந்தவர்கள் – 170 பேர்கள், கொரோனாவிற்கு நேற்று 2 பேர் பலி என்றும் தெரிய வந்துள்ளது.

அதேபோல் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3500 ஐ கடந்தது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,540 ஆக உயர்ந்துள்ளது என்பதும், அம்மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோர்- 1459, குணமடைந்தோர்- 1909, மொத்த உயிரிழப்பு- 19 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply