வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக, மற்றும் அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் கட்சிகள் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்பாலாஜி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் இன்று முதல் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் வி.வி.செந்தில்நாதன் இன்று அல்லது நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply