வேட்புமனுவை வாபஸ் பெற்றார் என்.ஆர். இளங்கோ
திமுகவின் 4வது மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றதால் அவரது வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, திமுக 4வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோவை நிறுத்தியது. ஆனால் வைகோவின் வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது
இதனையடுத்து இன்று என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து ஆறு உறுப்பினர் பதவிகளுக்கு ஆறு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவதால் தேர்தல் இன்றி ஆறு பேர்களும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.