கொரோனா நோயாளிக்காக படகு ஏற்பாடு செய்த காவல்துறை
ஆந்திராவில் வெள்ளத்தில் மிதந்த கிராமத்தில் இருந்த ஒரு கொரோனா நோயாளியை அழைத்து வர காவல்துறை படகை ஏற்பாடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள தோடாவரம் என்ற கிராமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருந்தது
இந்த நிலையில் அந்த கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இருப்பது காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படகு ஒன்றை ஏற்பாடு செய்து அந்த படகில் தனது சக அதிகாரிகளை அழைத்து கொண்டு நோயாளியை அந்த படகில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்தார்
இந்த சம்பவம் காரணமாக அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு அந்த கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோக்கள் வெளியாகி காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.