என்ன காரணம்?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கும் அவருடைய மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகிய நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதித்யா ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராய் தற்போது திடீரென தனது மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஐஸ்வர்யாராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்பதும் தற்போது அமிதாப் உள்பட நால்வரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.