சமையல் எரிவாயு கேஸ் விலை உயர்ந்துள்ளது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எல்லோரும் உங்களது வீட்டில் உள்ள அடுப்பை தீ வைத்து எரித்து விடுங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியபோது ’எரிவாயு விலை உயர்ந்துவிட்டது, வீட்டிலுள்ள அடுப்புக்கு தீ வைத்து கொளுத்தி விடுங்கள், தொழில்களை மூடிவிடுங்கள், வெற்றி வாக்குறுதியை மட்டுமே சாப்பிடுங்கள் என்பதே மக்களுக்கு மோடி அரசின் அறிவுரையாக உள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்

கடந்த மாதம் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று முதல் மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply