விவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன்: மெகா மோசடி அம்பலம்
ஒரு விவசாயி வங்கியில் கடன் வாங்குவதும் பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடனை கட்ட முடியாமல் தவிப்பதும் நாடு முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகள்
இந்த நிலையில் விவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன் வழங்கி, அந்தக் கடனை கட்ட வலியுறுத்தி பாபநாசம் எஸ்பிஐ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த மோசடியின் மூலம் சுமார் ரூ.300 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பாபநாசம் ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.