விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்: திமுகவின் சுறுசுறுப்பான தேர்தல் பணி
வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை விருப்பமனு விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பித்தனர் என்பது தெரிந்ததே. மேலும் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தி வருகின்றனர். எந்தெந்த தொகுதிகளுக்காக விருப்ப மனு அளித்துள்ளார்களோ, அந்த தொகுதி குறித்த முழு விவரங்கள் அவர்களுக்கு தெரியுமா? என்ற கோணத்தில் நேர்காணல் நடந்து வருகிறது.
வாக்கு சேகரிக்கும் முறைகள், வெற்றி பெறுவதற்கான வழிகள், பிரச்சாரம் செய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து நேர்காணல் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.