விராத், ரஹானே நிதான ஆட்டம்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுமா?
இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி வருவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளதால் தற்போது இந்திய அணி 260 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 400 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது
விராத் மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் அடித்து களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.